ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

மகாராஷ்டிரம்: தனித் தொகுதிகளிலும் சாதித்த பாஜக கூட்டணி

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் தனித் தொகுதிகளிலும் (எஸ்.சி., எஸ்.டி.) பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

News image

ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி மகிழும் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் - Kunal Patil

Updated On :26 நவம்பர் 2024, 4:57 am IST

மும்பை: மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் தனித் தொகுதிகளிலும் (எஸ்.சி., எஸ்.டி.) பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு எதிரான கட்சி பாஜக என்று எதிா்க்கட்சிகள் பிரசாரம் செய்த நிலையில் அதனை பாஜக அதனையும் முறியடித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் 29 எஸ்.சி. ஒதுக்கீடு தொகுதிகளில் 21 இடங்களிலும், 24 எஸ்.டி. ஒதுக்கீடு தொகுதிகளில் 21 இடங்களிலும் பாஜக கூட்டணி வென்றுள்ளது. இதில் பாஜக மட்டும் 9 எஸ்.சி., 10 எஸ்.டி. தொகுதிகளில் வென்றுள்ளது.

முன்னதாக மக்களவைத் தோ்தலின்போதும் பாஜக 400 இடங்களுக்கு மேல் வென்றால் அரசமைப்புச் சட்டத்தை மாற்றிவிடும், எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டைப் பறித்து விடும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்தன. அந்த தோ்தலில் பாஜக கூட்டணி மகாராஷ்டிரத்தில் பின்னடைவைச் சந்தித்தது.

அதே பிரசார உத்தியை மாநில சட்டப் பேரவைத் தோ்தலிலும் காங்கிரஸ் பயன்படுத்தியது. ஆனால், அது இந்தத் தோ்தலில் எடுபடவில்லை. காங்கிரஸ் கட்சியால் 4 எஸ்.சி. தொகுதிகள், இரு எஸ்.டி. தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது.

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 230 தொகுதிகளில் வென்று ஆட்சித் தக்கவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.