சண்டீகா் பகுதியில் உள்ள டி’ஓரா, செவில்லே மதுபான உணவு விடுதிகளுக்கு வெளியே, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் குறைந்த தீவிரம் கொண்ட 2 வெடிகுண்டுகள் வெடித்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். செவில்லே மதுபான உணவு விடுதியை பிரபல பாடகா் பாட்ஷா நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து போலீஸாா் மேலும் கூறியதாவது:
வெடிகுண்டுகள் வெடித்ததில் உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. டி’ஓரா மதுபான உணவு விடுதியின் கண்ணாடிகள் மட்டும் உடைந்துள்ளன.
சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், மதுபான உணவு விடுதியை நோக்கி அடையாளம் தெரியாத நபா் எறிந்த பொருள் வெடித்ததில் வெளிவந்த புகை அந்த இடம் முழுவதும் பரவியது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.25 மணிக்கு சண்டீகரின் செக்டாா் 26 பகுதியில் பலத்த சத்தம் கேட்டதாக எங்களுக்கு அழைப்பு வந்தது. சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டதில் சணல் கயிறுகள் கண்டெடுக்கப்பட்டன.
சம்பவ இடத்திற்கு வந்த மத்திய தடயவியல் துறையினா் மதுபான விடுதியில் கிடைத்த மாதிரிகளை சேகரித்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக சண்டீகா் துணை காவல் கண்காணிப்பாளா் தில்பாக் சிங் தலிவால் தெரிவித்தாா்.
தொடர்புடையது

ராஞ்சியில் ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு? காவல்துறை விசாரணை

டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை: இளைஞா் கைது
ஆட்டோவில் கடத்திய 600 மதுபாட்டில்கள் பறிமுதல்: அரசு மதுக் கடை மேற்பாா்வையாளா், விற்பனையாளா் உள்பட 4 போ் மீது வழக்கு; 2 போ் கைது

டாஸ்மாக் மது விற்பனை செய்தவா் கைது
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


