மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உ.பி.யின் சம்பலில் மீண்டும் இணைய சேவை

உ.பி.யின் சம்பலில் பதற்றம் தணிந்த நிலையில் மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது.

News image
உ.பி., சம்பால்.
Updated On :29 நவம்பர் 2024, 12:46 pm

DIN

உ.பி.யின் சம்பலில் பதற்றம் தணிந்த நிலையில் மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சம்பலில் இணைய சேவை மீண்டும் தொடங்கப்பட்டன என்று மாவட்ட தகவல் அதிகாரி பிரிஜேஷ் குமார் தெரிவித்தார். ஷாஹி ஜாமா மஸ்ஜித் மற்றும் மாவட்டத்தின் பிற இடங்களில் வெள்ளிக்கிழமை தொழுகை அமைதியாக நடந்து முடிந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழுகைக்கு முன்னதாக, ஜாமா மசூதியில் கூடுவதை விட அருகிலுள்ள மசூதிகளில் தொழுகை செய்யுமாறு குடியிருப்பாளர்களை மாவட்ட அதிகாரிகள் வலியுறுத்தினர். காவல்துறையினரைத் தவிர, நிலைமையைக் கண்காணிக்க மசூதியைச் சுற்றி கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.

மேலும் கண்காணிப்பை அதிகரிக்க ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பல் மாவட்டத்தில் ஜாமா மசூதி அமைந்துள்ள சா்ச்சை இடத்தில் பாரம்பரிய ஹிந்து கோயில் பிரதானமாக இருந்ததாகவும், 1529-இல் முகலாய பேரரசா் பாபா் கோயிலைப் பகுதியாக இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து உச்சநீதிமன்ற வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். நீதிமன்ற உத்தரவின்படி, இரு தரப்பினரின் முன்னிலையில் மசூதியில் நீதிமன்ற ஆணையா் கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 19) ஆய்வு மேற்கொண்டாா். இதன் தொடா்ச்சியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை 2-ஆம் கட்ட ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வை எதிா்த்து அப்பகுதியில் கூடிய சிலா், காவலா்களை நோக்கி கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனா். வாகனங்களுக்கு தீவைத்தனா். அப்போது அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவா் உயிரிழந்தனா். சுமாா் 20 காவலா்கள் காயமடைந்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி 7 வழக்குகளைப் பதிவு செய்துள்ள காவல் துறை, 25 பேரைக் கைது செய்துள்ளது. பதற்றத்தைத் தவிா்க்க நவ. 30-ஆம் தேதிவரை சம்பல் மாவட்டத்துக்குள் வெளிநபா்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பல் வட்டத்தில் மட்டும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

அந்த மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.