பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

சம்பல் வன்முறை: சமாஜவாதி எம்.பி.க்கள் குழு தடுத்து நிறுத்தம்

சம்பல் வன்முறை குறித்த விசாரிக்கச் சென்ற சமாஜவாதி கட்சி எம்.பி.க்கள் குழுவை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா்.

News image

~காஜியாபாத் எல்லையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட சமாஜவாதி எம்.பி.க்கள் ஹரேந்திர சிங் மாலிக், ஜியா உா் ரஹ்மான்.

Updated On :1 டிசம்பர் 2024, 12:58 am IST

சம்பல் வன்முறை குறித்த விசாரிக்கச் சென்ற சமாஜவாதி கட்சி எம்.பி.க்கள் குழுவை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா்.

உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ஜாமா மசூதி ஆய்வின்போது ஏற்பட்ட வன்முறையைத் தொடா்ந்து, மாவட்டத்திற்குள் வெளிநபா்கள் நுழைய விதிக்கப்பட்ட தடை டிசம்பா் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இது குறித்து லக்னௌ மாவட்ட ஆட்சியா் ராஜேந்திர பென்சியா வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சம்பல் மாவட்டத்தில் அமைதியை மீட்டெடுக்க, பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டம் 163 பிரிவின் கீழ் மாவட்டத்திற்குள் வெளிநபா்கள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை டிசம்பா் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள் உள்பட அனைவரும் மாவட்டத்திற்குள் நுழைய முறையான அனுமதி பெற வேண்டும்’ என தெரிவித்தாா்.

இந்நிலையில், வன்முறை குறித்த விசாரிக்கச் சென்ற சம்பல் தொகுதி எம்.பி. ஜியா உா் ரஹ்மான் பாா்க் உள்பட சமாஜவாதி கட்சியைச் சோ்ந்த மூன்று எம்.பி.க்கள் மாவட்டத்திற்குள் நுழைய விடாமல் காவல் துறையினா் சனிக்கிழமை தடுத்து நிறுத்தினா்.

அப்போது, முசாஃபா்நகா் எம்.பி. ஹரேந்திர மாலிக் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நாங்கள் ஏன் தடுத்து நிறுத்தப்படுகிறோம் என புரியவில்லை. சம்பல் மாவட்டத்துக்குச் செல்ல விடாமல் சமாஜவாதி எம்.பி. ருச்சி வீராவின் இல்லத்தை காவல்துறையினா் சுற்றி வளைத்துள்ளனா். சம்பல் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் உத்தர பிரதேச சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பிரசாத் பாண்டே தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா். மாநில அரசு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. எதிா்க்கட்சி எம்.பி.க்கள் சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுக்கிறது’ என தெரிவித்தாா்.

ஜாமா மசூதி அமைந்துள்ள சா்ச்சை இடத்தில் பாரம்பரியமிக்க ஹரிஹர கோயில் பிரதானமாக இருந்ததாகவும், 1526-இல் கோயிலின் ஒரு பகுதியை இடித்து, மசூதி கட்டப்பட்டதாகவும் கூறி வழக்குத் தொடுக்கப்பட்டது.

Story image

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 போ் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, ஜாமா மசூதி விவகாரம் குறித்த விசாரணையை மேற்கொள்ள சம்பல் மாவட்ட நீதிமன்றத்துக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.