/

காந்தி, லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாளையொட்டி (அக்டோபர் 2) அவர்களது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

News image

தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Updated On :2 அக்டோபர் 2024, 9:13 am IST

புதுதில்லி: மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாளையொட்டி (அக்டோபர் 2) அவர்களது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளான 'காந்தி ஜெயந்தி' இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதேபோன்று நாட்டின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.

பிரதமர் மோடி அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் "மதிப்பிற்குரிய மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினேன்.

மேலும் இதே நாளில் பிறந்த நாட்டின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் மரியாதை செலுத்தினேன்.

தேசத்தின் தந்தை என்று போற்றப்படும் காந்தி, உண்மை மற்றும் அகிம்சை கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றி, உலகெங்கிலும் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் ஆர்வலர்களின் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கின்றது.

மேலும் அவரது வாழ்க்கை,உண்மை,நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலான கொள்கைகள் நாட்டு மக்களுக்கு எப்போதும் ஊக்கமளிக்கும் அளிக்கின்றது என்று மோடி தெரிவித்தார்.

மேலும் "ஜெய் ஜவான், ஜெய் கிசான்" என்ற முழக்கத்தை எழுப்பிய லால் பகதூர் சாஸ்திரி தனது வாழ்க்கையை நாட்டின் வீரர்கள், விவசாயிகளுக்காக அர்ப்பணித்தவர், அவரது எளிமை மற்றும் நேர்மை அவருக்கு பெரும் மரியாதையைப் பெற்று தந்தது. அவரது நற்பண்புகள் மற்றும் கொள்கை அடிப்படையிலான அவரது வாழ்க்கை, மக்களுக்கு சேவை செய்யவும், நாட்டிற்காக அவர்களின் நோக்கங்களை நிறைவேற்றவும் நம்மை ஊக்குவிக்கின்றது" என மோடி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.