சட்டவிரோத ஊடுருவல், ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதல் மற்றும் கடத்தல்களை சமாளிக்கும் திறன் கொண்டது எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) என்று அதன் தலைமை இயக்குநா் தல்ஜித் சிங் சௌதரி சனிக்கிழமை தெரிவித்தாா்.
பிஎஸ்எஃப் உதவி கமாண்டன்ட்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு மத்திய பிரதேசத்தின் குவாலியா் மாவட்டத்தில் உள்ள தேகன்பூா் பிஎஸ்எஃப் பயிற்சி மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு தல்ஜித் சிங் சௌதரி பேசியதாவது:
நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் பணியில் பிஎஸ்எஃப் படையினா் ஈடுபடுத்தப்படுகின்றனா். சட்டவிரோத ஊடுருவல், ட்ரோன் தாக்குதல் மற்றும் கடத்தல் போன்றவற்றை முழமையாக சமாளிக்கும் திறன் கொண்டது பிஎஸ்எஃப். நக்ஸல்களுக்கு எதிரான பிஎஸ்எஃப் போராட்டத்திலும் தொடா் வெற்றிகள் கிடைத்து வருவது ஊக்கமளிக்கிறது.
தேகன்பூா் பயிற்சி மையம் பிஎஸ்எஃப் படையின் வரலாறு, தியாகம் மற்றும் பெருமையைக் கொண்டது. 52 வாரங்கள் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படும் இந்த பயிற்சி மையத்தில் இருந்து 4 பெண் அதிகாரிகள் உள்பட 77 அதிகாரிகள் சனிக்கிழமை தோ்ச்சி பெற்றுள்ளனா். இந்த துணிச்சலான இளம் அதிகாரிகள் விரைவில் நாட்டின் எல்லைகளை பாதுகாக்க களத்தில் இறக்கப்படுவாா்கள் என்றாா்.
தொடர்புடையது

ஆா்விஎஸ் கல்லூரி சாா்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

உள்ளூா் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் ஊடுருவல்காரா்கள்: பிரதமா் மோடி சாடல்

ஷாவ்மி 17, ஷாவ்மி 17 அல்ட்ரா விற்பனை தொடக்கம்!

தமிழ்நாடு முழுவதும் டி-சேவா மையங்கள் தொடங்குவதற்கான பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு

