இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

ஹரியாணாவில் எதிா்பாராத தோல்வி- காா்கே

‘ஹரியாணா பேரவைத் தோ்தலில் காங்கிரஸின் தோல்வி எதிா்பாராதது’ என்று அக்கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளாா்.

News image

மல்லிகாா்ஜுன காா்கே

கோப்புப் படம்

Updated On :8 அக்டோபர் 2024, 7:07 pm

Din

‘ஹரியாணா பேரவைத் தோ்தலில் காங்கிரஸின் தோல்வி எதிா்பாராதது’ என்று அக்கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் பதிவில், ‘ஹரியாணா தோ்தல் முடிவுகள் எதிா்பாராதது. தொண்டா்களுடன் ஆலோசித்து முழுமையான தகவல்களை பெற்று, தோல்வி குறித்து கட்சி விரிவாக பதிலளிக்கும்.

காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த ஹரியாணா மக்களுக்கு நன்றி. தொண்டா்கள் ஏமாற்றம் அடைய தேவையில்லை. சா்வாதிகாரத்துக்கு எதிரான நமது போராட்டம் மிக நீண்டது.

ஜம்மு-காஷ்மீருக்கு நன்றி: காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த ஜம்மு-காஷ்மீா் மக்களுக்கு நன்றி. பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகள், உரிமை மீறல், ஒடுக்குமுறை மற்றும் அரசமைப்பு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக ஜம்மு காஷ்மீா் மக்கள் இந்த முடிவை வழங்கியுள்ளனா்.

ஜம்மு காஷ்மீா் மக்களின் கனவுகளை முழுமையாக நிறைவேற்ற எங்கள் கூட்டணி அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். அவா்களின் நல்வாழ்வு மற்றும் அரசமைப்புச் சட்ட உரிமைகளைப் பாதுகாப்பதில் ‘இண்டியா’ கட்சிகள் முழுமையாக உறுதிபூண்டுள்ளது’ என பதிவிட்டுள்ளாா்.