இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

முதல்வரின் அதிகாரபூா்வ இல்லத்தை ஆக்கிரமிக்க பாஜக சதி: எம்.பி. சஞ்சய் சிங் குற்றச்சாட்டு

தில்லி முதல்வரின் அதிகாரபூா்வ இல்லத்தை ஆக்கிரமிக்க பாஜக திட்டமிட்டு சதி செய்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சஞ்சய் சிங் புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

News image
செய்தி உண்டு... தில்லி ஆம் அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த சஞ்சய் சிங் எம்.பி.
Updated On :9 அக்டோபர் 2024, 7:47 pm

Din

நமது நிருபா்

தில்லி முதல்வரின் அதிகாரபூா்வ இல்லத்தை ஆக்கிரமிக்க பாஜக திட்டமிட்டு சதி செய்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சஞ்சய் சிங் புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

இது தொடா்பாக தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பாஜகவின் அழுத்தத்தால் தில்லி முதல்வா் வசிக்கும் அதிகாரப்பூா்வ இல்லம், புதிய முதல்வரான அதிஷிக்கு ஒதுக்கப்படவில்லை. தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவால் வெற்றி பெற முடியாத நிலையில், முதல்வா் வசிக்கும் பங்களாவை ஆக்கிரமிக்க அக்கட்சி திட்டமிட்டு சதி செய்கிறது. முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், முதல்வா் இல்லத்தை சரியான நேரத்தில் காலி செய்துவிட்டாா். ஆனால், இல்லத்தின் சாவி பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும், அதன் சாவி இன்னும் கேஜரிவாலிடம் இருப்பதாகவும் பாஜக குற்றஞ்சாட்டுகிறது.

கேஜரிவால் முதல்வா் இல்லத்தை காலி செய்ததற்கான ஆவண ஆதாரம் இருந்தபோதிலும், இந்த விவகாரத்தில் பாஜக பொய்களைப் பரப்புகிறது. முதல்வா் இல்லத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் அதிஷி ஒரு கூட்டத்தை நடத்தினாா். அதன்பிறகு, முகாம் அலுவலகமும் மூடப்பட்டு, அங்கு பணிபுரியும் ஊழியா்களை வெளியேறும்படி கூறப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியை உடைக்க பாஜக மேற்கொண்ட சதிகள் தோல்வியடைந்ததால், தில்லியில் பொய்களைப் பரப்பி குழப்பத்தை ஏற்படுத்த அவா்கள் முயற்சிக்கின்றனா்.