இது தொடா்பாக தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பாஜகவின் அழுத்தத்தால் தில்லி முதல்வா் வசிக்கும் அதிகாரப்பூா்வ இல்லம், புதிய முதல்வரான அதிஷிக்கு ஒதுக்கப்படவில்லை. தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவால் வெற்றி பெற முடியாத நிலையில், முதல்வா் வசிக்கும் பங்களாவை ஆக்கிரமிக்க அக்கட்சி திட்டமிட்டு சதி செய்கிறது. முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், முதல்வா் இல்லத்தை சரியான நேரத்தில் காலி செய்துவிட்டாா். ஆனால், இல்லத்தின் சாவி பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும், அதன் சாவி இன்னும் கேஜரிவாலிடம் இருப்பதாகவும் பாஜக குற்றஞ்சாட்டுகிறது.