இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

வயநாடு: நவ. 13-ல் வாக்குப்பதிவு!

வயநாடு மக்களவைத் தொகுதியில் நவ. 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்தது தேர்தல் ஆணையம்.

News image

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் - Election Commission of India

Updated On :15 அக்டோபர் 2024, 10:52 am

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் இன்று (அக். 15) அறிவித்தது.

வயநாடு, ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

ரேபரேலி தொகுதி உறுப்பினராக ராகுல் காந்தி தொடரும் நிலையில், அவரின் சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டுகிறார்.

தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை அறிவித்தார்.

இரு மக்களவைத் தொகுதிக்குத் தேர்தல்

மகாராஷ்டிரத்துக்கு நவ. 20ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்றும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவ. 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் குறிப்பிட்டார்.

இதேபோன்று வயநாடு மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு நவ. 13ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்தார்.

மேலும், மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள நான்தேட் மக்களவைத் தொகுதிக்கு நவ. 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.