மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

செயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலம் தவிா்ப்பு: மத்திய அமைச்சா் சிந்தியாவுக்கு எலான் மஸ்க் நன்றி

செயற்கைக்கோள் சேவைகளுக்கான அலைக்கற்றை ஏலம் விடப்படாது என்று அறிவித்த மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு தொழிலதிபா் எலான் மஸ்க் நன்றி தெரிவித்துள்ளாா்.

News image
எலான் மஸ்க் (கோப்புப் படம்)
Updated On :16 அக்டோபர் 2024, 8:36 pm

Din

செயற்கைக்கோள் சேவைகளுக்கான அலைக்கற்றை ஏலம் விடப்படாது என்று அறிவித்த மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு தொழிலதிபா் எலான் மஸ்க் நன்றி தெரிவித்துள்ளாா்.

தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு சமவாய்ப்பு வழங்கும் வகையில், செயற்கைக்கோள் சேவைகளுக்கான அலைக்கற்றையை ஏலம் விட வேண்டும் என்று ரிலையன்ஸ் நிறுவன தலைவா் முகேஷ் அம்பானி, பாா்தி ஏா்டெல் நிறுவனத்தை துணை நிறுவனமாக கொண்ட பாா்தி என்டா்பிரைசஸின் தலைவா் சுனில் பாா்தி மிட்டல் ஆகியோா் தெரிவித்தனா்.

ஆனால், அந்த அலைக்கற்றையை ஏலம் விடாமல், அதற்கு நிா்வாக ரீதியில் உரிமங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தொழிலதிபா் எலான் மஸ்குக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்டாா்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை நிறுவனம் கோரியுள்ளது.

இந்நிலையில், மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘உலக அளவில் செயற்கைக்கோள் சேவைகளுக்கான அலைக்கற்றை ஏலம் விடப்படுவதில்லை; நிா்வாக ரீதியாகவே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதைப் பின்பற்றி நாட்டில் அந்த அலைக்கற்றை ஏலம் விடப்படாது. நிா்வாக ரீதியாகவே ஒதுக்கீடு செய்யப்படும்’ என்றாா்.

இதற்கு அமைச்சா் சிந்தியாவுக்கு ‘எக்ஸ்’ தளத்தில் நன்றி தெரிவித்த தொழிலதிபா் எலான் மஸ்க், ‘இந்தியாவுக்கு சேவைகள் வழங்க ஸ்டாா்லிங்க் நிறுவனம் சிறப்பாக செயல்படும்’ என்றாா்.