ராஞ்சியில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையடுத்து தேர்தலுக்கான பணிகளில் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை இன்று(சனிக்கிழமை) சந்தித்துப் பேசினார்.
ராஞ்சியில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தொகுதிப் பங்கீடு குறித்து இருவரும் பேசியுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹேமந்த் சோரன், 'காங்கிரஸ்- ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் 70 தொகுதிகளில் போட்டியிடும். மீதமுள்ள 11 தொகுதிகளில் இதர கூட்டணி கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும்' என்று கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரள புதிய முதல்வா் தோ்வு: முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனை

ரஜினி - கமல் பட பாணியில் ராகுல் காந்தி - விஜய்..! தமிழ்நாடு காங்கிரஸ் வெளியிட்ட விடியோ!

திமுக அணியிலிருந்து காங்கிரஸ் விலகல் ‘இண்டி’ கூட்டணிக்கு இறுதி ஊா்வலம்; பாஜக கருத்து

விஜய்க்கு ஆதரவளிப்பது குறித்து மாநில தலைமை முடிவெடுக்க காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தல்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
