மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருப்பதி லட்டு விவகாரம்: பவன் கல்யாணுக்கு நீதிமன்றம் சம்மன்!

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

News image
பவன் கல்யாண்- ANI
Updated On :22 அக்டோபர் 2024, 6:41 am

DIN

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்ட கலப்பட நெய் பயன்படுத்தப்படுவதாகப் பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு ஹைதராபாத் சிவில் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய திருப்பதி லட்டு விவகாரத்தில் ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்துமாறுப் பேசியதாகக் கூறி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது வழக்கறிஞர் ராமா ராவ் இம்மானேனி வழக்கு தொடர்ந்துள்ளார்,

இதனைத் தொடர்ந்து, வருகிற நவம்பர் 22 அன்று நேரில் ஆஜராகுமாறு ஹைதராபாத் சிவில் நீதிமன்றம் பவன் கல்யாணுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

தெலங்கானாவில் உள்ள பல இணையதளங்கள் மற்றும், சமூக வலைதளங்களில் பவன் கல்யாண் வெளியிட்ட அறிக்கை பகிரப்பட்டதாக மனுதாரர் கூறியதால், தெலங்கானா தலைமைச் செயலர் சாந்தி குமாரிக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், பகிரப்பட்டப் பதிவுகளை தெலங்கானா அரசு நீக்கவேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய மனுதாரரான வழக்கறிஞர் ராமா ராவ் இம்மானேனி, “நாங்கள் ஹிந்து மத நம்பிக்கைகளைக் முழுமையாகக் கடைபிடித்து வருகிறோம். பவன் கல்யான் தெலங்கானாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்றாலும் அவரது இழிவுபடுத்தும் விதமான, அவதூறான பேச்சால் நாங்கள் மிகவும் புண்பட்டுள்ளோம்” என்று கூறினார்.

மேலும், “கடந்த செப்டம்பர் 20 முதல் 22 வரையிலான நாள்களில் திருப்பதி பிரசாதத்தில் பசு மற்றும் பன்றியின் கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவை கலந்ததாக எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி பவன் கல்யாண் தனது வெறுப்புப் பேச்சால் குற்றம் சாட்டியிருந்தார்.

திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்குப் படைக்கப்படும் பிராசாதம் மீது அவதூறு பரப்பிய பவன் கல்யாண் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுக்கு இத்தகைய சர்ச்சைக்குரியக் கருத்துக்களைத் தெரிவிக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும்” என்று மனுதாரர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.