உ.பி. இடைத்தேர்தல்: அனைத்து தொகுதிகளையும் சமாஜவாதிக்கு விட்டுக் கொடுக்கும் காங்கிரஸ்?

உத்தரப் பிரதேச இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு பற்றி...
ஜம்மு - காஷ்மீரில் சந்தித்துக் கொண்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் மற்றும் பிரியங்கா காந்தி.
ஜம்மு - காஷ்மீரில் சந்தித்துக் கொண்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் மற்றும் பிரியங்கா காந்தி.ANI
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் சமாஜவாதி கட்சிக்கு காங்கிரஸ் விட்டுக் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரப் பிரதேசத்தில் காலியாகவுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு வருகின்ற நவ. 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

மில்கிபூர் சட்டப்பேரவை தேர்தலுக்கு தொடர்புடைய வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அந்த தொகுதிக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சமாஜவாஜி மற்றும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றன.

மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 43 தொகுதிகளை கைப்பற்றினாலும் சமாஜவாதி 37 இடங்களிலும் காங்கிரஸ் 6 இடங்களில் மட்டுமே வென்றது.

இந்த நிலையில், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் 5 தொகுதிகள் கேட்ட நிலையில், காசியாபாத் மற்றும் கைர் தொகுதிகளை மட்டுமே கொடுப்பதற்கு சமாஜவாதி முன்வந்தது.

மேலும், சமாஜவாதி போட்டியிடும் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டதால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.

இதனிடையே, கடந்த வாரம் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அகிலேஷ் யாதவுடன் தொகுதி பங்கீடு குறித்து ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.

ஆனால், காங்கிரஸுக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடிவெடுத்துள்ளதாக அகிலேஷ் யாதவ் திட்டவட்டமாக தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இரண்டு தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதற்கு பதிலாக, இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாளுடன் முடிவடையவுள்ள நிலையில், இதுவரை காங்கிரஸில் இருந்து வேட்பாளர்கள் அறிவிக்கவில்லை.

இதனிடையே, கூட்டணியில் காங்கிரஸை போட்டியிட வைக்கும் முயற்சியில் சமாஜவாதி ஈடுபட்டு வருவதாகவும், ஏற்கெனவே வழங்கிய இரு தொகுதிகளுடன் மில்கிபூர் இடைத்தேர்தலையும் காங்கிரஸுக்கு வழங்க அகிலேஷ் யாதவ் முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்று அல்லது நாளைக்கு உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் போட்டியிடுமா? இல்லையா? என்பது உறுதியாகிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com