92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஒடிஸா: டானா புயல் கரையை கடக்க தொடங்கியது!

சூறாவளிக் காற்று மணிக்கு 100-120 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கை...

News image
Updated On :24 அக்டோபர் 2024, 7:29 pm

DIN

ஒடிஸாவில் ‘டானா’ புயல் இன்று(அக். 25) கரையைக் கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நள்ளிரவு 12.30 மணி நிலவரப்படி, ஒடிஸாவின் பாரதீப் பகுதிக்கு கிழக்கு-வடகிழக்கே 50 கி.மீ. தொலைவிலும், தாமரா பகுதிக்கு தெற்கு- தென்கிழக்கே 40 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கு தென்மேற்கே 160 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ள டானா புயல் நிலப்பரப்பை நோக்கி நகர்ந்து வருகிறது.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிஸா - மேற்கு வங்க கடலோரப் பகுதிகளை ஒட்டி, ஒடிஸாவின் புரி மற்றும் மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகளுக்கு இடையே பிதர்காணிகா - தாமராவுகு இடைப்பட்ட பகுதியில் இன்று அதிகாலை கரையை கடக்க உள்ளது.

இதன் காரணமாக, அடுத்த 3 - 4 மணி நேரத்துக்கு, மேற்கண்ட பகுதிகளில் அதிவேக சூறாவளிக் காற்று மணிக்கு 100-120 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.