நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

புதுமையிலும் தொழில்நுட்பத்திலும் இந்திய இளையோருக்கு ஈடு இணையில்லை! -பிரதமர் பெருமிதம்

புதுமையிலும் தொழில்நுட்பத்திலும் இந்திய இளையோருக்கு ஈடு இணையில்லை! -பிரதமர் பெருமிதம்

News image

கோப்புப்படம்

Updated On :30 அக்டோபர் 2024, 7:07 pm IST

உலகளவில் புதுமையிலும் தொழில்நுட்பத்திலும் இந்திய இளையோருக்கு ஈடு இணையில்லை எனப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மென்பொருள் துறையைச் சார்ந்த எண்ணிலடங்கா பணியாளர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பத் தளமாக ‘கிட் ஹப்’ விளங்குகிறது. இந்த நிலையில், கிட் ஹப்பின் தலைமை நிர்வாக அதிகாரியான தாமஸ் டாம்கே, மென்பொருள் துறையில் இந்தியர்கள் அளித்துவரும் மகத்தான பங்களிப்பை அண்மையில் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

மென்பொருள் தொழில்நுட்பத் துறையில் உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் மக்களைக் கொண்ட நாடாக இந்தியா இப்போது உருவெடுத்துள்ளதாக தாமஸ் டாம்கே தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலகளவில் தொழில்நுட்பத்தில் வல்லமை பொருந்தியதொரு தேசமாக இந்தியா எழுச்சியடைவதை தடுக்க இயலாது எனவும் அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இதனை மேற்கோள்காட்டி, பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 30) வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “புதுமையிலும் தொழில்நுட்பத்திலும் இந்திய இளையோர் மிகச் சிறந்தவர்கள்!” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.