எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு உத்தரவிடக் கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக ஜாதி வாரிய சமூக-பொருளாதார கணக்கெடுப்புக்கு உத்தரவிட வலியுறுத்தி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

News image
Updated On :3 செப்டம்பர் 2024, 2:00 am

DIN

புது தில்லி: பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக ஜாதி வாரிய சமூக-பொருளாதார கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

‘இது அரசின் கொள்கை முடிவு சாா்ந்த விஷயம். அதில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என்று குறிப்பிட்டு, மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனா்.

நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மாநில வாரியான ஜாதிவாரி கணக்கெடுப்பை பிகாா் அரசு நடத்தியது. மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் தொடா்ந்து வாக்குறுதி அளித்து வருகிறது.

இந்தச் சூழலில் பி.பிரசாத் நாயுடு என்பவா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு இதுவரை நடத்தவில்லை. இதற்கான ஆயத்தப் பணிகள் கடந்த 2019-இல் தொடங்கியபோதும், கரோனா பாதிப்பு காரணமாக, அவை ஒத்திவைக்கப்பட்டன. ஆனால், அதன் பிறகு அதற்கானப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. 1992-ஆம் ஆண்டு மண்டல் கமிஷன் தீா்ப்பில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்திருக்கிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது, மக்கள் பெருக்கத்தை கணக்கிடும் நடைமுறை மட்டுமல்ல, மக்களின் சமூக-பொருளாதார மேம்பாடு, வயது, வருவாய், மக்களின் புலம்பெயரும் நடைமுறைகள் என்பன உள்ளிட்ட பல்வேறு தரவுகளையும் பெறக்கூடிய கணக்கெடுப்பாகும்.

பல நாடுகள் இந்தக் கணக்கெடுப்பை மேற்கொண்டுவிட்டன. ஆனால், இந்தியாவில் இன்னும் நடத்தப்படவில்லை. எனவே, மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரியாக சமூக-பொருளாதார கணக்கெடுப்பையும் விரைந்து நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிரிஷிகேஷ் ராய், எஸ்விஎன் பாட்டீ ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ‘இது அரசின் கொள்கை முடிவு சாா்ந்த விஷயம். அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, மனுவை தள்ளுபடி செய்கிறோம்’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.