இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கர்நாடகம்: ஆசிரியர் தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்க சென்ற குழந்தைகள் விபத்தில் பலி

பள்ளி பேருந்து மீது அரசு பேருந்து விபத்து

News image
கோப்புப் படம்
Updated On :5 செப்டம்பர் 2024, 3:11 pm

Sakthivel

பள்ளி பேருந்து மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் பலியாகினர்.

கர்நாடகத்தின் ராய்ச்சூர் மாவட்டத்தில் ஆசிரியர் தினத்தையொட்டி, ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, சுமார் 40 மாணவர்கள் பள்ளிப் பேருந்தில் சென்றுள்ளனர். இந்த நிலையில், கபகல் கிராமத்தின் அருகே சென்ற பள்ளிப் பேருந்தின்மீது, மற்றொரு அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், பள்ளி பேருந்தில் பயணித்த பள்ளிக் குழந்தைகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்; மேலும், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் மூன்று குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிகிறது.

அதுமட்டுமின்றி, 18 குழந்தைகள் வரையில் காயமடைந்ததால், ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில், விபத்தினால் வருத்தமடைந்ததாகவும், உயிரிழந்த குழந்தைகளுக்காக இரங்கல் தெரிவித்தும் பதிவிட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

எம்.எல்.ஏ. ஜி. ஹம்பையா நாயக், துணை ஆணையர் நிதீஷ் கே, காவல்துறை கண்காணிப்பாளர் புட்டமடியா, அமைச்சர் டாக்டர் சரண் பிரகாஷ் படேல் ஆகியோரும் மாணவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதை உறுதி செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.