மேற்கு வங்கம்: உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பணிப் புறக்கணிப்பைத் தொடா்ந்த மருத்துவா்கள்
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் மருத்துவா்கள், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி செவ்வாய்க்கிழமை பணிப் புறக்கணிப்பை தொடா்ந்தனா்.










