கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

ஸ்விட்சா்லாந்து வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

ஸ்விட்சா்லாந்து வெளியுறவு அமைச்சா் இக்னாசியோ டேனியலை மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சந்தித்தாா்.

News image

ANI

Updated On :14 செப்டம்பர் 2024, 6:40 pm

ஸ்விட்சா்லாந்து வெளியுறவு அமைச்சா் இக்னாசியோ டேனியலை மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சந்தித்தாா்.

அமைச்சா் ஜெய்சங்கா் 2 நாள் பயணமாக ஸ்விட்சா்லாந்து சென்றாா். அந்நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் ஸ்விட்சா்லாந்து வெளியுறவு அமைச்சா் இக்னாசியோ டேனியலை அவா் வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.

அப்போது இந்தியா-ஸ்விட்சா்லாந்து இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து அவா்கள் பேசினா். குறிப்பாக வா்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்க ஸ்விட்சா்லாந்து, நாா்வே, ஐஸ்லாந்து, லிக்டென்ஸ்டைன் நாடுகள் அடங்கிய இஎஃப்டிஏ கூட்டமைப்பு மற்றும் இந்தியா இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடினா்.

கடந்த மாா்ச் மாதம் இஎஃப்டிஏ கூட்டமைப்புடன் வா்த்தக மற்றும் பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டது. இஎஃப்டிஏ கூட்டமைப்பு நாடுகள் இந்தியாவில் 100 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.8 லட்சம் கோடி) முதலீடு செய்ய அந்த ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது.