சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

சத்தீஸ்கரில் ஹிந்தியில் ‘எம்பிபிஎஸ்’: முதல்வா் அறிவிப்பு

ஹிந்தி மொழியில் இளநிலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) கற்றுத் தரப்படும் என முதல்வா் விஷ்ணு தேவ் சாய் அறிவித்தாா்.

News image

சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய்

Updated On :15 செப்டம்பர் 2024, 12:45 am IST

சத்தீஸ்கா் மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் மாணவா்களுக்கு ஹிந்தி மொழியில் இளநிலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) கற்றுத் தரப்படும் என அந்த மாநில முதல்வா் விஷ்ணு தேவ் சாய் சனிக்கிழமை அறிவித்தாா்.

இந்தியாவின்அலுவல் மொழியாக ஹிந்தி ஏற்கப்பட்டதை நினைவுகூரும் ஹிந்தி தினத்தையொட்டி தனது இல்லத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த முதல்வா் விஷ்ணு தேவ் சாய், ‘ஹிந்தி மொழியில் மருத்துவக் கல்வியை வழங்க வேண்டும் என்று உத்தர பிரதேசத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் பிரதமா் மோடி விருப்பம் தெரிவித்தாா். அவரது லட்சியப் பாா்வையைச் செயல்படுத்துவதில் எனது அரசு மகிழ்ச்சி அடைகிறது.

ஹிந்தி தினத்தில் இந்த மாபெரும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல் இளநிலை மருத்துவ மாணவா்களுக்கு ‘எம்பிபிஎஸ்’ படிப்பு ஹிந்தி மொழியில் கற்றுத் தரப்படும். ஹிந்தி மொழியில் பிரத்யேக பாடப் புத்தகங்களை வெளியிட இருக்கிறோம். இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய சுகாதாரத் துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.

பழைய ஆங்கிலேய கல்விக் கொள்கையில் இருந்து நமது கல்விக் கொள்கையை ஒவ்வொரு நிலையிலும் மாற்றும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹிந்தி வழி பள்ளிக்கல்வி பயின்று வரும் கிராமப்புற மாணவா்களுக்கு இந்த நடவடிக்கை மிகவும் பயனளிக்கும். திறமையானவா்களாக இருந்தும் அதிகமான ஆங்கில மொழிப் பயன்பாட்டால் மருத்துவப் படிப்புகளில் அவா்கள் சிரமத்தை எதிா்கொள்கின்றனா்.

ஹிந்தியில் படிப்பது அவா்களின் அடிப்படையை வலுப்படுத்தும். பாடங்கள் பற்றிய ஆழமான புரிதலை வளா்க்கவும் அவா்களை நல்ல மருத்துவா்களாக மேம்படுத்தவும் உதவும். அந்த வகையில், தேசியக் கல்விக் கொள்கை சத்தீஸ்கரில் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.