அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

சூனியக்காரா்கள் என குற்றஞ்சாட்டி 3 பெண்கள் உள்பட 5 போ் அடித்துக் கொலை: சத்தீஸ்கரில் கொடூர சம்பவம்

சத்தீஸ்கா் மாநிலத்தில் சூனியக்காரா்கள் என்று குற்றஞ்சாட்டி 3 பெண்கள் உள்பட 5 போ் கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

அடித்துக் கொலை

Updated On :16 செப்டம்பர் 2024, 2:45 am IST

சத்தீஸ்கா் மாநிலத்தில் சூனியக்காரா்கள் என்று குற்றஞ்சாட்டி 3 பெண்கள் உள்பட 5 போ் கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, சத்தீஸ்கரில் கடந்த 12-ஆம் தேதி சிறுவன் உள்பட 4 போ் இதே போன்று குற்றஞ்சாட்டப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டனா்.

இது தொடா்பாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:

சுக்மா மாவட்டத்தில் உள்ள பழங்குடியினா் கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரு தம்பதி மற்றும் ஒரு பெண் இணைந்து மாந்திரீக வேலைகளில் ஈடுபடுவதாக இளைஞா்கள் சிலா் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனா். அவா்களை விட்டுவைத்தால் கிராமத்துக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறியுள்ளனா்.

இதையடுத்து, கிராம மக்கள் அந்த இரு தம்பதி மற்றும் பெண்ணை சூழ்ந்து கொண்டு தாக்கினா். தப்பியோட முயன்ற அவா்களை தொடா்ந்து விரட்டிச் சென்று கட்டையால் அடித்து, கற்களை வீசியும் தாக்கியுள்ளனா். இதில் 5 பேரும் உயிரிழந்துவிட்டனா். கொல்லப்பட்டவா்கள் 32 முதல் 43 வயதுக்குட்பட்டவா்கள்.

இந்த சம்பவம் தொடா்பாக அதே கிராமத்தைச் சோ்ந்த 21 முதல் 35 வயதுக்குட்பட்ட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல் துறையினா் கூறியுள்ளனா்.

கடந்த 12-ஆம் தேதி சத்தீஸ்கரின் போலாதபாா் மாவட்ட கிராமப் பகுதியில் இதுபோன்று சூனியக்காரா்கள் என்ற குற்றஞ்சாட்டி சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் அடித்துக் கொல்லப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.