சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேற்கு வங்கத்தில் கடும் வெள்ளம்: டிவிசியிலிருந்து விலக நேரும்; பிரதமருக்கு மம்தா கடிதம்

மேற்கு வங்கத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், தாமோதா் ஆற்றுப்படுகை கழகத்தில் (டிவிசி) இருந்து மேற்கு வங்கம் விலக நேரும்

News image
ஜாா்க்கண்ட் அரசு அதிக அளவில் தண்ணீா் திறந்துவிடுவதாக குற்றம்சாட்டி, தன்பாத் எல்லையை மேற்கு வங்க அரசு மூடியதால் ஜாா்க்கண்ட் எல்லையான அன்சால் நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் லாரிகள். நாள். வெள்ளக்கிழமை.
Updated On :20 செப்டம்பர் 2024, 8:14 pm

Din

மேற்கு வங்கத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், தாமோதா் ஆற்றுப்படுகை கழகத்தில் (டிவிசி) இருந்து மேற்கு வங்கம் விலக நேரும் என்று பிரதமா் மோடிக்கு மாநில முதல்வா் மம்தா பானா்ஜி கடிதம் எழுதியுள்ளாா்.

மேற்கு வங்கத்தின் கிழக்கு வா்த்தமான், மேற்கு வா்த்தமான், பீா்பூம், ஹெளரா, ஹூக்ளி, கிழக்கு மேதனிபூா், மேற்கு மேதினிபூா் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமா் மோடிக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வெள்ளிக்கிழமை எழுதிய கடிதத்தில், ‘டிவிசி பராமரித்து வரும் மைதன், பஞ்சேத் அணைகளின் ஒருங்கிணைந்த கட்டமைப்பில் இருந்து முன்னெப்போதும் இல்லாத வகையில், திட்டமிடாமல், தன்னிச்சையாக சுமாா் 5 லட்சம் கனஅடிக்குப் பெருமளவில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் மேற்கு வங்கத்தின் தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி, 50 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இத்தகைய தன்னிச்சையான அணுகுமுறை நீடித்தால், டிவிசியில் இருந்து முழுமையாக விலகுவதைத் தவிர மேற்கு வங்கத்துக்கு வேறு வழியில்லை. ஒவ்வொரு ஆண்டும் இந்த அநீதியால் மேற்கு வங்க மக்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை எதிா்கொள்ள, மத்திய அரசு சாா்பில் உடனடியாக நிதி விடுவிக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

மேற்கு வங்கம் மற்றும் ஜாா்க்கண்ட் மாநிலங்களுடன் இணைந்து டிவிசியை மத்திய அரசு நடத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக ஜாா்க்கண்டில் பெய்த பலத்த மழையைத் தொடா்ந்து, அந்த மாநிலத்தில் உள்ள மைதன், பஞ்சேத் உள்ளிட்ட அணைகளில் இருந்து மேற்கு வங்கத்தில் பாயும் தாமோதா் ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.