தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

நிதி முறைகேடுகள் நடைபெற்ற காலத்தில் ஆட்சிக்கு வந்துள்ளோம்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்!

ஆந்திரத்தில் நிதி முறைகேடுகள் நடைபெற்ற காலத்தில் ஆட்சிக்கு வந்ததாகக் கூறி முந்தைய ஒய்எஸ்ஆர் கட்சியின் ஆட்சியை துணை முதல்வரான பவன் கல்யாண் விமர்சித்துள்ளார்.

News image
பவன் கல்யாண் (கோப்புப் படம்)
Updated On :21 செப்டம்பர் 2024, 11:51 am

DIN

ஆந்திரத்தில் நிதி முறைகேடுகள் நடைபெற்ற காலத்தில் ஆட்சிக்கு வந்ததாகக் கூறி முந்தைய ஒய்எஸ்ஆர் கட்சியின் ஆட்சியை துணை முதல்வரான பவன் கல்யாண் விமர்சித்துள்ளார்.

ஆந்திரத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சிக்காலத்தில் மாநிலத்தின் வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கடந்த சில ஆண்டுகளாக மறுக்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

இது தொடர்பாகப் பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், ”மாநிலத்தில் நிதி முறைகேடுகள் நடைபெற்ற காலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். மாநிலத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.

மக்கள் எங்களை நம்பி மிகப்பெரிய பொறுப்பினைத் தந்துள்ளனர். சந்திரபாபு நாயுடு தலைமையில் என்டிஏ கூட்டணியை சட்டப்பேரவைத் தேர்தலில் 160 தொகுதிகளிலும், மக்களவைத் தேர்தலில் 21 தொகுதிகளிலும் மக்கள் வெற்றிபெற வைத்தனர்’’ என்று கூறினார்.

மேலும், பேசிய அவர், “இது எங்களுக்கு மிகப்பெரிய சவால். மக்கள் முந்தைய ஆட்சியின் மீது மிகவும் வெறுப்புடன் இருந்தனர். அந்த நேரத்தில் நாங்கள் போராடி ஆட்சி அமைத்துள்ளோம். நாங்கள் ஆட்சியமைத்ததும் ஒரு விஷயத்தை முக்கியமாகக் கவனித்தோம்.

கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லாமல் இருந்துள்ளது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சியில் 16,437 ஆசிரியர் பணியிடங்கள் குறித்த வேலைவாய்ப்புகள் தொடர்பான ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. முந்தைய அரசு சொந்த நலனில் கவனமாக இருந்து வளர்ச்சியைப் புறக்கணித்தனர்’’ என்று பவன் கல்யாண் விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.