விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

வீட்டில் கருக்கலைப்பு செய்யப்பட்ட பெண் பலி: கணவர், மாமனார் கைது!

கருக்கலைப்பு செய்யப்பட்ட பெண் பரிதாபமாக பலியான நிலையில், அவரது கணவர் மற்றும் மாமனாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

News image

(கோப்புப்படம்) - படம்|TNIE

Updated On :25 செப்டம்பர் 2024, 9:30 am IST

வீட்டில் கருக்கலைப்பு செய்யப்பட்ட 24 வயதுடைய பெண் பரிதாபமாக பலியான நிலையில் அவரது கணவர் மற்றும் மாமனாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பெண்ணுக்கு கருக்கலைப்பு

மகாராஷ்டிரத்தின் புணேயில் உள்ள இல்லத்தில் 24 வயதுள்ள பெண்ணுக்கு ரகசியமாக கருக்கலைப்பு செய்ய சம்பவத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பெண்ணின் கணவர் மற்றும் மாமனாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுதொடர்பாக இறந்தப் பெண்ணின் மாமியார் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இறந்த 4 மாத சிசுவை அவரது குடும்பத்தினர் அவர்களது வீட்டுப் பண்ணைத் தோட்டத்தில் புதைத்ததும் விசாரணையில் தெரிவந்துள்ளது. கருக்கலைப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட ஒரு தனியார் மருத்துவரும் காவல்துறை விசாரணைக்கு உள்படுத்தப்பட்டார்.

உயிரிழந்தப் பெண் 2017 ஆம் ஆண்டு அவரது கணவரை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பமானதால் அவர்கள் கருக்கலைப்பு செய்ய முடிவெடுத்துள்ளனர்.

காவல்துறை விசாரணை

அவருக்கு பிறக்கவிருந்த குழந்தை பெண் குழந்தை என்பதால் அவரது குடும்பத்தினர் கருக்கலைப்பு செய்ய முடிவெடுத்திருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தப் பெண்ணுக்கு அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரின் உடல் நிலை மிகவும் மோசமானது. அதற்கு அடுத்த நாள் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக இந்தாபூர் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இறந்தப் பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனை

அதனடிப்படையில், கணவர் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டனர். பண்ணைத் தோட்டத்தில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடன் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் புணே ரூரல் காவல்துறையின் இந்தாபூர் காவல் நிலையத்தில் பிஎன்எஸ் 85, 90, 91 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.