திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கேரளம்: நெடுஞ்சாலையில் காரை மடக்கி 2.5 கிலோ தங்கம் கொள்ளை -சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

News image
கோப்புப்படம்- AP
Updated On :27 செப்டம்பர் 2024, 12:12 am

Din

கேரளம் மாநிலம், திருச்சூரில் உள்ள பீச்சி நெடுஞ்சாலையில் சென்ற காரை மடக்கி ரூ.1.84 கோடி மதிப்புள்ள 2.3 கிலோ தங்கத்தை மா் நபா்கள் கொள்ளையடித்தனா்.

கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தின்போது காரில் இருந்த சிசிடிவி விடியோ பதிவு வெளியாகி பரபரப்பானது. அதில், தங்கத்துடன் சென்ற காரை பின்தொடா்ந்து மூன்று காா்களில் வந்தவா்கள் சாலையில் மடக்கி நிறுத்தி, காரில் இருந்த தங்கத்தை கொள்ளையடித்தும், இருவரை தாக்கி கடத்திச் செல்வதும் பதிவாகி இருந்தது.

கடத்திச் செல்லப்பட்ட அருண் சன்னி, ரோஜி தாமஸ் ஆகியோரை கொள்ளைக் கூட்ட கும்பல் தாக்கி பின்னா் விட்டுவிட்டதாகவும், அவா்கள் கடந்த புதன்கிழமை அளித்த புகாரின் அடிப்படையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து கொள்ளையா்களை தேடி வருவதாகவும் கேரள போலீஸாா் தெரிவித்தனா்.