கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

ம.பி.யில் கனமழை: உஜ்ஜைனியில் கோயில் சுவர் இடிந்து 2 பேர் பலி!

மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழைக்கு உஜ்ஜைனியில் கோயில் சுவர் இடிந்து 2 பேர் பலியாகினர்

News image

மீட்புப் பணியில் ஈடுபட்டோர்.

Updated On :27 செப்டம்பர் 2024, 11:08 pm IST

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் பெய்த கனமழையால் கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர்.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள மஹாகாலேஷ்வர் கோயில் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து உஜ்ஜையின் மாவட்ட குற்றவியல் நீதிபதி நீரஜ் குமார் சிங் கூறுகையில், “இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் இருவர் இந்தூருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மஹாகல் லோக் பகுதியின் கேட் எண் 4-க்கு அருகில் அமைந்துள்ள மஹராஜ்வாடா பள்ளியின் ஒரு பகுதி எல்லை சுவர் இடிந்து விழுந்ததில் இந்தச் சம்பவம் நடந்தது.

மஹாராஜ்வாடா பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு எல்லைச் சுவரின் ஒரு பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சுவர் இடிந்து விழுந்தது. இந்தச் சம்பவத்தில் 4 பேர் படுகாயம் அடைந்து மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், துரதிருஷ்டவசமாக ஒரு ஆணும், ஒரு பெண்ணும் பலியாகினர். 2 பெண்கள் இந்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் இந்தச் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்ததுடன், “உஜ்ஜையினியில் உள்ள மகாகல் கோயிலின் கேட் எண் 4 அருகே சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்ததாகவும், நான்கு பேர் காயமடைந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.