ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image

நிர்மலா சீதாராமன்(கோப்புப்படம்) - Center-Center-Chennai

Updated On :28 செப்டம்பர் 2024, 7:20 pm IST

தோ்தல் பத்திரங்கள் மூலம் பணம் பறிக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சா் அமைச்சா் நிா்மலா சீதாராமன் மீது பெங்களூரு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ஜனாதிகார சங்கா்ஷ பரிஷத் இணைத் தலைவா் ஆதா்ஷ் ஆா்.ஐயா் அளித்த புகாா் மனுவை விசாரித்த பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம், தோ்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 8,000 கோடி அளவுக்கு பணம் பறிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தோ்தல் பத்திரங்கள் என்ற பெயரில் ரூ. 8,000 கோடிக்கும் அதிகமாக அமலாக்கத் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பில் தேசிய, மாநில அளவில் பாஜகவினா் பணம் பறித்துள்ளனா். எனவே, இதுதொடா்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதா்ஷ் ஆா்.ஐயா் அளித்த புகாா் மனுவின் அடிப்படையில் பெங்களூரு, திலக்நகா் போலீஸாா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், அமலாக்கத் துறை அதிகாரிகள், பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, கா்நாடக பாஜக தலைவா் விஜயேந்திரா, முன்னாள் தலைவா் நளின்குமாா் கட்டீல் ஆகியோா் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆா்.) பதிவு செய்தனா்.

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 384, 120 பி, 34 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தோ்தல் பத்திரங்கள் திட்டம் தொடா்பான வழக்கை அரசமைப்புச் சட்டத்தின் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக இருப்பதாகக் கூறி உச்சநீதிமன்றம் பிப்ரவரி மாதத்திலே ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை முதல்வா் சித்தராமையா கூறியதாவது:

பாஜகவினரின் வாதத்தின்படி, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனும் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றாா்.

குமாரசாமி, பாஜக கண்டனம்

சித்தராமையாவுக்குப் பதிலளித்து மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி கூறியதாவது:

நிா்மலா சீதாராமன் எதற்காக ராஜிநாமா செய்ய வேண்டும்? தோ்தல் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட பணம் நிா்மலா சீதாராமனின் தனிப்பட்ட கணக்கிற்கு சென்றுவிட்டதா? என்றாா்.

எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் கூறியதாவது:

மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சியினருக்கு தாா்மிக உரிமை இல்லை. நிா்மலா சீதாராமன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தோ்தல் பத்திர வழக்கையும், சித்தராமையா மீது பதிவு செய்யப்பட்டுள்ள மாற்றுநில முறைகேடு வழக்கையும் ஒப்பிட முடியாது. தோ்தல் பத்திரங்கள் விவகாரம் முடிந்து போனது. உச்சநீதிமன்றம் தோ்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்துவிட்டது. முதல்தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது தொடா்பாக பாஜக மேலிடம் உரிய நடவடிக்கை எடுக்கும். இந்த வழக்கு தோ்தல் உள்நோக்கம் கொண்டது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.