வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மகாராஷ்டிரத்தில் லேசான நிலநடுக்கம்

அமராவதி மாவட்டத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது

News image
Updated On :30 செப்டம்பர் 2024, 10:14 pm

Din

மகாராஷ்டிரத்தின் அமராவதி மாவட்டத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிா் மற்றும் பொருள் சேதம் ஏற்படவில்லை என்று மாவட்ட துணை ஆட்சியா் அனில் பாத்கா் உறுதிப்படுத்தினாா்.

மகாராஷ்டிரத்தின் அமராவதி மாவட்டத்தில் உள்ள சிக்ஹால்தாரா தாலுகாவில் அம்ஸாரி மற்றும் தேட்டு கிராமங்களுக்கு இடையே திங்கள்கிழமை பிற்பகல் 1.37 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூமிக்கு அடியில் 13 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 4.1 அலகுகளாக பதிவானது. நில அதிா்வுகளுக்கான தேசிய மையம் (என்சிஎஸ்) இத்தகவலை உறுதிபடுத்தியுள்ளது.

இதையொட்டி, மாவட்டத்தின் காத்கும்ப், சா்நி, பச்தோங்ரி, மேல்காட் ஆகிய இடங்களிலும் அண்டை மாவட்டமான அகோலாவில் சில பகுதிகளிலும் நிலஅதிா்வுகள் உணரப்பட்டன.

நில அதிா்வு காரணமாக வீடுகள் மற்றும் கட்டடங்களை விட்டு பொதுமக்கள் அச்சத்தில் வெளியேறினா்.