மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகாராஷ்டிரம்: நாட்டுப் பசுக்களின் பாதுகாப்புக்கு புதிய நிதித் திட்டம்

நாட்டு பசு மாடுகளை ராஜமாதா-கோமாதா என்று அறிவித்ததுடன் அதன் பாதுகாப்புக்கு புதிய நிதித் திட்டத்தையும் மகாராஷ்டிர அரசு அறிவித்தது.

News image
தேவேந்திர ஃபட்னவீஸ்- கோப்புப் படம்
Updated On :30 செப்டம்பர் 2024, 10:54 pm

DIN

இந்திய கலாசாரம், வேளாண்மை மற்றும் சுகாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாட்டு பசு மாடுகளை ‘ராஜமாதா-கோமாதா’ என்று அறிவித்ததுடன் அதன் பாதுகாப்புக்கு புதிய நிதித் திட்டத்தையும் மகாராஷ்டிர அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

நாட்டு பசுக்களைப் பாதுகாக்கும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக மும்பையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த மாநில துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.

2019-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மகாராஷ்டிரத்தில் 46.13 லட்சம் நாட்டு பசுக்கள் இருந்தன. இது அதற்கு முந்தைய கணக்கெடுப்பின் எண்ணிக்கையிலிருந்து 20.69 சதவீதம் குறைவாகும்.

நாட்டு பசுக்களின் எண்ணிக்கை குறைவதைக் கருத்தில் கொண்டு, நாட்டு பசுக்களை வளா்க்கும் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்க மகாராஷ்டிர அரசு முடிவெடுத்துள்ளது.

கோசாலையில் ஒவ்வொரு பசுவுக்கும் தினசரி ரூ.50 மானியம் வழங்கும் கால்நடைத் துறையின் முன்மொழிவுக்கு மாநில அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த கோசாலைகளின் செயல்பாட்டை மாநில கோசாலை ஆணையரகம் கண்காணிக்கும் என்றாா்.

மேலும், இதுதொடா்பாக மாநில அரசு வெளியிட்ட அறிவிக்கையில், ‘மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பகுதியில் தேவ்னி, லால்கந்தாரி, மேற்கு மகாராஷ்டிரத்தின் கில்லாா், வடக்கில் தாங்கி, விதா்பா பகுதியில் காவ்லௌ ஆகிய நாட்டு பசு இனங்கள் உள்ளனா்.

கடந்த சில ஆண்டுகளாக, மாநிலத்தில் நாட்டு பசுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. நாட்டு பசும்பால் மனித ஊட்டச்சத்து, ஆயுா்வேத சிகிச்சைக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இயற்கை விவசாயத்திலும் எருவின் பயன்பாடு அதிக மகசூலை உறுதிப்படுத்துகிறது. இந்நிலையில், இந்தப் புதிய திட்டம் நாட்டு பசு வளா்ப்பில் விவசாயிகளை ஊக்கப்படுத்தும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர அரசின் அறிவிப்பு தொடா்பாக மத்திய இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கூறுகையில், ‘இந்தியாவில் ஹிந்துகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனா். அவா்கள் பசுக்களை தாயாகக் கருதுகின்றனா். பசுக்களை கௌரவப்படுத்தும் வகையில் அரசு இந்த முடிவெடுத்துள்ளது’ என்றாா்.