இந்திய கலாசாரம், வேளாண்மை மற்றும் சுகாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாட்டு பசு மாடுகளை ‘ராஜமாதா-கோமாதா’ என்று அறிவித்ததுடன் அதன் பாதுகாப்புக்கு புதிய நிதித் திட்டத்தையும் மகாராஷ்டிர அரசு திங்கள்கிழமை அறிவித்தது.
நாட்டு பசுக்களைப் பாதுகாக்கும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக மும்பையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த மாநில துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.
2019-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மகாராஷ்டிரத்தில் 46.13 லட்சம் நாட்டு பசுக்கள் இருந்தன. இது அதற்கு முந்தைய கணக்கெடுப்பின் எண்ணிக்கையிலிருந்து 20.69 சதவீதம் குறைவாகும்.
நாட்டு பசுக்களின் எண்ணிக்கை குறைவதைக் கருத்தில் கொண்டு, நாட்டு பசுக்களை வளா்க்கும் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்க மகாராஷ்டிர அரசு முடிவெடுத்துள்ளது.
கோசாலையில் ஒவ்வொரு பசுவுக்கும் தினசரி ரூ.50 மானியம் வழங்கும் கால்நடைத் துறையின் முன்மொழிவுக்கு மாநில அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த கோசாலைகளின் செயல்பாட்டை மாநில கோசாலை ஆணையரகம் கண்காணிக்கும் என்றாா்.
மேலும், இதுதொடா்பாக மாநில அரசு வெளியிட்ட அறிவிக்கையில், ‘மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பகுதியில் தேவ்னி, லால்கந்தாரி, மேற்கு மகாராஷ்டிரத்தின் கில்லாா், வடக்கில் தாங்கி, விதா்பா பகுதியில் காவ்லௌ ஆகிய நாட்டு பசு இனங்கள் உள்ளனா்.
கடந்த சில ஆண்டுகளாக, மாநிலத்தில் நாட்டு பசுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. நாட்டு பசும்பால் மனித ஊட்டச்சத்து, ஆயுா்வேத சிகிச்சைக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இயற்கை விவசாயத்திலும் எருவின் பயன்பாடு அதிக மகசூலை உறுதிப்படுத்துகிறது. இந்நிலையில், இந்தப் புதிய திட்டம் நாட்டு பசு வளா்ப்பில் விவசாயிகளை ஊக்கப்படுத்தும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர அரசின் அறிவிப்பு தொடா்பாக மத்திய இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கூறுகையில், ‘இந்தியாவில் ஹிந்துகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனா். அவா்கள் பசுக்களை தாயாகக் கருதுகின்றனா். பசுக்களை கௌரவப்படுத்தும் வகையில் அரசு இந்த முடிவெடுத்துள்ளது’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்கள் பாதுகாப்புக்கு புதிய பலம்: கடலூா் எஸ்.பி. பெருமிதம்

செய்தியின் மதிப்பு எதைப் பொறுத்தது? ஃபட்னவீஸ் விளக்கம்!

எரிபொருள் நெருக்கடி: வந்தே பாரத் ரயிலில் சென்ற மகாராஷ்டிர முதல்வர்!

ரூ.6.5 லட்சம் கோடி மதிப்பீட்டில் அணுமின் திட்டங்கள்- மகாராஷ்டிர அரசு ஒப்பந்தம்
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



