பாகிஸ்தானில் மொபைல் சேவைகள் நிறுத்தம்!

பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மொபைல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் மொபைல் சேவைகள் நிறுத்தம்
பாகிஸ்தானில் மொபைல் சேவைகள் நிறுத்தம்
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மொபைல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சில பகுதிகளில் இரட்டை பயங்கரவாதத் தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து புதிய நிர்வாகத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக மக்கள் வாக்களிக்கும்போது எந்தவித பிரச்னையும் ஏற்படாத நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், நாடு முழுவதும் மொபைல் சேவைகளை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை இடைவேளையின்றி நடைபெறுகிறது. மொத்தம் 128,585,760 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க நாடு முழுவதும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கராச்சி, பெஷாவர் உள்ளிட்ட சில நகரங்களில் தொலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com