விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

அயோத்தி ராமர் கோயில் கருவறை தங்கக் கதவுகள்!

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கருவறைக்கு தங்கக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.

News image

ராமர் கோயில் கருவறை தங்கக் கதவுகள்

Updated On :9 ஜனவரி 2024, 7:09 pm IST


அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கருவறைக்கு தங்கக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. கதவுகள் பொருத்தப்பட்டதன் புகைப்படங்கள் இன்று (ஜன.9) வெளியாகியுள்ளன. ராமர் கோயிலில், கருவறை உள்பட மொத்தம் 13 கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. 

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் மூலவர் பிரதிஷ்டை விழா ஜன. 22-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 136 சனாதனத்தைச் சேர்ந்த 25,000 ஹிந்து மதத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு சிறப்பு விருந்தினர்களாக 10,000 பேர் பங்கேற்கவுள்ளனர். இதுபோன்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் முழுவதும் முடிந்த நிலையில், இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கருவறையில் சிலை பிரதிஷ்டை செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. 

இந்நிலையில், கருவறையில் இருபுறம் திறக்கும் வகையில் தங்கக்கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.