வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்: 2 நாள்கள் இடைவெளிக்குப் பின் மீண்டும் தொடக்கம்

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் இரு நாள்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று(ஜன. 28) மீண்டும் தொடங்கியுள்ளது.

News image

காரில் அமர்ந்தபடி மக்களுடன் கைகுலுக்கும் ராகுல் காந்தி

Updated On :28 ஜனவரி 2024, 10:37 am

புது தில்லி : மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியிலிருந்து ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் இரு நாள்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று(ஜன. 28) மீண்டும் தொடங்கியுள்ளது.

இதற்காக புதுதில்லியிலிருந்து, இன்று(ஜன.28) காலை, மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் உள்ள  பாக்தோக்ரா விமான நிலையம் வந்தடைந்த ராகுல் காந்தி, தொடர்ந்து   சாலை மார்க்கமாக காரில் பயணித்தார்.  அப்போது,  காரின் மேற்கூரையில் அமர்ந்தபடி, சாலையின் இருபுறமும் சூழந்திருந்த மக்களை பார்த்து கையசைத்தபடி பயணித்தார். அவருடன் மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி உடனிருந்தார். 

மணிப்பூரில் இம்மாதம் 14-ஆம் தேதி இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, அசாம் வழியாக கடந்த 25-ஆம் தேதி மேற்கு வங்கம் சென்றடைந்தார்.  அதனைத் தொடர்ந்து 2 நாட்கள் ஓய்வுக்குப் பின் இன்று(ஜன.28) மீண்டும் பயணத்தை தொடங்கியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.