/

கர்நாடகத்தில் நிகழ்ந்த கோர விபத்து.. சுழன்று அடித்த காரிலிருந்து..

கர்நாடகத்தில் சாலையில் தடுப்பில் மோடி சுழன்று அடித்த காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட உடல்கள்

News image
சிசிடிவி காட்சி
Updated On :2 ஏப்ரல் 2025, 6:12 am

DIN

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா அருகே, சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதிய கார், பல முறை சுழன்று அடித்த காரிலிருந்து உடல்கள் தூக்கிவீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சித்ரதுர்கா என்ற பகுதியில், சாலையில் வேகமாக வந்த கார், சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோடி 15 முறை பல்டி அடித்து, அடுத்தப் பக்கத்தின் சாலையைக் கடந்து சென்று விழுந்தது.

இந்த விபத்தில், காரில் இருந்த 3 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் சல்லகேரே - பல்லாரி தேசிய நெடுஞ்சாலையில் சித்ரதுர்கா மாவட்டம் பொம்மக்கனஹள்ளில் மஜித் என்ற பகுதியில் இந்தகோர விபத்து நிகழ்ந்துள்ளது. கார் பல முறை சுழற்றி அடித்ததில், காருக்குள் இருந்தவர்கள் வெளியில் தூக்கிவீசப்பட்டுள்ளனர். இதில், இரண்டு குழந்தைகள் மற்றும் அவரது தந்தை என மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

பலியானவர்கள், மௌலா அப்துல் (35), அவரது மகன்கள் ரெஹ்மான் (15), சமீர் (10) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். காரில் இருந்த மேலும் மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.