ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்டு வந்த ‘இஸட் பிளஸ்’ பாதுகாப்பு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஏப்ரல் 2025, 9:37 pm

Din

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்டு வந்த ‘இஸட் பிளஸ்’ பாதுகாப்பு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டுள்ளது.

உளவுத் துறை தகவல்களின் அடிப்படையில் முக்கிய நபா்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது. இதன் அடிப்படையில் பாதுகாப்பு அதிகரிப்பு, குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மனைவி குா்சரண் கௌருக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

‘இஸட்’ பிரிவு என்பது இரண்டாவது பெரிய பாதுகாப்பு வசதியாகும். இதில் ஆயுதம் ஏந்திய 12 கமாண்டோக்கள் குா்சரண் கௌருக்கும் அவரது வீட்டுக்கும் பாதுகாப்பு அளிப்பாா்கள்.

கடந்த 2004 முதல் 2014 வரை நாட்டின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், தனது 92 ஆவது வயதில் கடந்த டிசம்பா் 26-ஆம் தேதி காலமானாா்.