மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வெப்ப அலை: திறந்தவெளி தொழிலாளர்கள் சந்திக்கும் துயரங்கள்!

தில்லியின் வெப்ப அலையால் திறந்தவெளி தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சுகாதார சவால்கள்..

News image
திறந்தவெளி தொழிலாளர்கள்- Center-Center-Villupuram
Updated On :7 ஏப்ரல் 2025, 9:44 am

DIN

தலைநகர் தில்லியில் கடுமையான வெப்பம், அதீத மாசு காரணமாக அங்குள்ள மக்கள் சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சுகாதார தினம் இன்று கடைப்பிடிக்கும் அதேவேளையில், தலைநகரில் ஆயிரக்கணக்கான தினக்கூலி செய்யும் திறந்தவெளி தொழிலாளர்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். தில்லியில் கடந்த சில வாரங்களாகக் கடுமையான வெய்யில் கொளுத்தி வருகின்றது. ஒருபக்கம் வெய்யில், மறுபக்கம் மாசு இரண்டுக்கும் மத்தியில் வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதனிடையே பல நகரில் இன்றும், நாளையும் அதிக வெய்யிலுக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வுத் துறை விடுத்துள்ளது. தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை சராசரியை விட 3.1 டிகிரி அதிகமாக 38.2 டிகிரி செல்சியஸாக பதிவானது. குறைந்தபட்ச வெப்பநிலை 18.5 டிகிரி செல்சியஸாகவும், காற்றின் தரக் குறியீடு 209 டிகிரியில் மோசமான பிரிவில் தொடர்ந்தது.

அதிகப்படியான வெப்ப அலையால் சிக்கித் தவிக்கும் தில்லியைச் சேர்ந்த வெளிப்புற தொழிலாளர்கள் பல்வேறு பாதிப்புகளையும், சுகாதார சவால்களையும் எதிர்கொள்கின்றனர். அதில் தொழிலாளி ஒருவர் கூறுகையில்,

அதிகப்படியான வெப்பத்தால் தோல் எரிகிறது, சிறுநீரக எரிச்சல் போன்ற அவதிகள் ஏற்படுகின்றன. தில்லியில் போதுமான தண்ணீர் கிடைத்தாலும், ஓய்வெடுக்க நிழலான பகுதிகள் பற்றாக்குறையாகவே உள்ளது. உடலில் உள்ள நீர் வெளியேறுவதால் விரைவில் சோர்வு ஏற்படுகிறது. நீண்ட நேரம் வெளியில் வேலை செய்யமுடியாத நிலை ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

ஏற்கெனவே காற்று மாசு தலைநகரைப் பாதித்துள்ளது. பல்வேறு உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. அதைக் கோடையிலும் நன்கு உணர முடிகிறது. இதில் கடுமையான வெய்யிலால் உடல் ரீதியான பிரச்னைகள் மட்டுமல்லாது, நிதி நெருக்கடியையும் ஏற்பட்டுள்ளது. மக்கள் வெளியில் வந்து அன்றாடம் பொருள்கள் வாங்குவதும் குறைந்துவிட்டதாக அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.