உ.பி.: பசு கடத்தல்காரர்கள் இருவர் சுட்டுப் பிடிப்பு
உத்தரப் பிரதேசத்தில் பசு கடத்தல்காரர்கள் இரண்டு பேர் என்கவுன்டருக்குப் பிறகு கைது செய்யப்பட்டனர்.


உத்தரப் பிரதேசத்தில் பசு கடத்தல்காரர்கள் இரண்டு பேர் என்கவுன்டருக்குப் பிறகு கைது செய்யப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள லால்கஞ்ச் பகுதியில் பசு கடத்தல்காரர்கள் இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு என்கவுன்டர் செய்தனர்.
பின்னர் அவர்களை கைது செய்தனர். கால்களில் சுடப்பட்ட இருவரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
அவர்கள் மிர்சாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆகாஷ் குப்தா (22), மணீஷ் யாதவ் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் கைதான இருவரிடம் இருந்து 12 கால்நடைகள், பசுக்களை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்ட பிக்அப் லாரி, இரண்டு சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.
இதையடுத்து அவர்கள் மீது லால்கஞ்ச் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...