குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

விஜயகாந்தும் நானும் நெருக்கமான நண்பர்கள்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

மறைந்த நடிகர் விஜயகாந்தை நினைவுகூர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி...

News image

கோப்புப்படம் | விஜயகாந்துடன் மோடி - படம்| ஏஎன்ஐ

Updated On :14 ஏப்ரல் 2025, 10:17 pm IST

தேமுதிக நிறுவனர் மறைந்த நடிகர் விஜயகாந்தை நினைவுகூர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் தமது எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர்! நானும், அவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக கலந்துரையாடியதுடன், இணைந்து பணியாற்றியும் இருக்கிறோம். சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

திடீரென விஜயகாந்தைப் பற்றிய நினைவுகளை மோடி பகிர்ந்து கொள்ள என்ன காரணம்?

சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கும் விடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ள விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக தலைவருமான பிரேமலதா தமது கணவருக்கும் பிரதமர் மோடிக்குமிடையிலான உறவை பதிவு செய்திருந்தார்.

அவர் கூறியதாவது: “கேப்டன் விஜயகாந்த் திரையுலகத்திலும், அரசியலிலும் பலரது அன்பையும் மரியாதையையும் பெற்ற மனிதர். பிரதமர் மோடிக்கும், விஜயகாந்துக்கும் இடையிலான உறவு அரசியலை தாண்டிய ஒன்று.

தமிழகத்தின் சிங்கம் என்று விஜயகாந்தை மோடி அன்புடன் அழைப்பார். விஜயகாந்த் உடல்நலக் குறைவுற்றிருந்தபோது பிரதமர் மோடி அடிக்கடி தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

மோடி-விஜயகாந்த் இடையிலான நட்பு பரஸ்பர மரியாதை, அன்பினால் கட்டமைக்கப்பட்டு இருந்தது” என்று பிரேமலதா பேசியுள்ளார்.

இந்த நிலையில், விஜயகாந்தை நினைவுகூர்ந்து பதிவு செய்துள்ளார் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.