புதிய வக்ஃப் சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
ஹரியாணா மாநிலம் ஹிசார் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அயோத்திக்கு விமான சேவையை கொடியசைத்து தொடக்கி வைத்த பிரதமர் மோடி, புதிய முனையக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி ஹிசார் - அயோத்தி விமான சேவை தொடங்கிவைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், அவர் பேசியதாவது:
“2014 ஆம் ஆண்டுக்கு முன்னதாக நாட்டில் வெறும் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், இன்று 150 விமான நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பயணிகளின் எண்ணிக்கை சாதனை படைத்து வருகின்றன. விமான நிறுவனங்கள் 2,000 விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன.
காங்கிரஸ் அரசியலமைப்பை அதிகாரத்தைப் பெறுவதற்கான ஒரு கருவியாக மாற்றியது. அவசரநிலையின் போது, அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அரசியலமைப்பு கொல்லப்பட்டது.
அரசியலமைப்பு மதச்சார்பற்ற சிவில் சட்டத்தைப் பற்றிப் பேசுகிறது, ஆனால் காங்கிரஸ் அதை ஒருபோதும் செயல்படுத்தவில்லை. இன்று, உத்தரகண்டில் சிவில் சட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, காங்கிரஸ் இதை எதிர்க்கிறது.
இடஒதுக்கீட்டின் பலன்கள் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகங்களைச் சென்றடைந்ததா என்பதை காங்கிரஸ் ஒருபோதும் சரிபார்க்கவில்லை. காங்கிரஸ் தனது சொந்த நலனுக்காக வக்ஃப் விதிகளையும் மாற்றியது.
வக்ஃப் என்ற பெயரில் லட்சக்கணக்கான ஹெக்டார் நிலங்கள் உள்ளன. வக்ஃப் சொத்துக்கள் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தால், அது அவர்களுக்குப் பயனளித்திருக்கும். ஆனால், நில மாஃபியாக்கள்தான் பயனடைந்து வந்தார்கள். ஏழைகளின் சொத்துகள் கொள்ளையடிக்கப்படுவது இந்த சட்டத்தின் மூலம் நிறுத்தப்பட்டுள்ளது. புதிய வக்ஃப் சட்டத்தின் கீழ், எந்தவொரு ஆதிவாசிக்கு சொந்தமான நிலத்தையோ அல்லது சொத்தையோ வக்ஃப் வாரியம் தொட முடியாது. ஏழை முஸ்லிம்களும் பாஸ்மண்டா முஸ்லிம்களும் தங்கள் உரிமைகளைப் பெறுவார்கள். இதுதான் உண்மையான சமூக நீதி" எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க : பெல்ஜியத்தில் தொழிலதிபர் மெஹுல் சோக்ஸி கைது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை பரந்தூரில் 2வது விமான நிலையம்? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் நிர்மல்குமார்

ஜனநாயகத்தை அழிக்க முக்கிய பதவிகளில் தனது ஆதரவாளர்களை நியமிக்கிறார் பிரதமர் மோடி! - கார்கே காட்டம்!

நேருவின் சாதனைகளை மறைக்க முயற்சி: பிரதமா் மோடி மீது காங்கிரஸ் சாடல்

மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம்: காங்கிரஸ்
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




