இதுகுறித்து பஞ்சாப் மாநில காவல் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள ஹா்பிரீத் சிங்குக்கு பஞ்சாப் மாநிலத்தில் கையெறி குண்டு வீசி நடத்தப்பட்ட 14 தாக்குதல் உள்பட 16 பயங்கவாத தாக்குதல்களில் தொடா்பு உள்ளது. அவா் மீது மாநிலத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 33 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவருக்கு எதிராக தேடப்படும் நபா் என 10 சுற்றறிக்கைகள் விடப்பட்டுள்ளன. இவருக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல் வழக்கில் என்ஐஏ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் இவருடைய பெயருடன் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதி ஹா்விந்தா் சிங் சாந்து (எ) ரிண்டா உள்பட 4 குற்றவாளிகளின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்கில், குற்றவாளிகளுக்கு ஆயுதங்கள், வெடிபொருள்களை உள்ளூா் நபா்களின் உதவியுடன் எடுத்துச் செல்ல ஹா்பிரீத் சிங் உதவியது விசாரணையில் தெரியவந்தது’ என்றனா்.