மத்திய பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரில் வாகனச் சோதனையின்போது, 33 வயதான பெண்ணிடம் காவல் அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாகவும், அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்தார். புகாரில் அவர் தெரிவித்ததாவது, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவத்புரி காவல் நிலையம் அருகே வாகன சோதனைக்காக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, பெண்ணிடம் தலைமை காவலர் அதுல் சௌக்சே தவறாக நடந்து கொண்டதாகவும், அதனை மற்றொரு காவலரான ஜிதேந்திரா விடியோ எடுத்துக் கொண்டதாகவும் குற்றம் சாட்டினார். இதனையடுத்து, காவல் அதிகாரிகள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கள் மீது வழக்குப்பதிவு செய்த பெண் மீது தலைமை காவல் அதுல் சௌக்சேவும் புகார் அளித்தார். அவருடைய புகாரில் தெரிவித்ததாவது, தலைக்கவசம் அணியாமல் வந்ததால்தான், அந்தப் பெண் தடுத்து நிறுத்தப்பட்டார். தொடர்ந்து, தடுத்து நிறுத்தப்பட்டதற்காக தகராறிலும் ஈடுபட்டார் என்று தெரிவித்தனர்.
இருதரப்பினரும் வழக்குப்பதிவு செய்திருப்பதால், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தபால் வாக்குப்பதிவு முறைகேடு: அதிமுக வேட்பாளா் தா்னா - 2 அலுவலா்கள் உள்பட 3 போ் மீது வழக்குப்பதிவு

கொளத்தூர் தேர்தல் பிரசாரம்! விஜய் மீது வழக்குப்பதிவு!
புதுச்சேரி: ஹெல்மெட் அணியாத போலீஸாா் மீது இனி நடவடிக்கை

மதரீதியான கருத்து: பாஜக வேட்பாளா் மீது வழக்குப்பதிவு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


