தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அல்வா கொடுத்து விழிப்புணர்வு!

தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளைப் பற்றி..
தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அல்வா கொடுத்து விழிப்புணர்வு!
Updated on
1 min read

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அல்வா மற்றும் திருக்குறள் புத்தகத்தை வழங்கி நூதன முறையில் போக்குவரத்து காவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தஞ்சாவூர் போக்குவரத்து காவலர்கள் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை தஞ்சாவூர் அண்ணா சிலை அருகே தடுத்து நிறுத்திய காவலர்கள் அவர்களுக்குத் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தி அவர்களுக்கு அல்வா மற்றும் திருக்குறள் புத்தகத்தை வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Summary

On the occasion of Thiruvalluvar Day, traffic police officers created awareness in a unique way by distributing halwa and copies of the Thirukkural to motorists who were riding without helmets.

தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அல்வா கொடுத்து விழிப்புணர்வு!
சனி தோஷம் நீக்கும் திருநள்ளாறு... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com