மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி மேயராக பாஜகவின் ராஜா இக்பால் சிங் தேர்வு!

தில்லி மேயராக பாஜகவின் ராஜா இக்பால் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

News image
ராஜா இக்பால் சிங்..
Updated On :25 ஏப்ரல் 2025, 12:24 pm

DIN

தில்லி மேயராக பாஜகவைச் சேர்ந்த ராஜா இக்பால் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தில்லியில் மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலை ஆம் ஆத்மி கட்சி புறக்கணித்ததால் பாஜக, காங்கிரஸ் இடையே இருமுனை போட்டி ஏற்பட்டது.

இதில், 142 வாக்குகளில் 133 வாக்குகளைப் பெற்ற பாஜகவைச் சேர்ந்த ராஜா இக்பால் சிங் ஒரு மனதாக மேயராகத் தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் 8 வாக்குகளைப் பெற்றது. ஒரு வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம், இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தில்லி மாநகராட்சியின் கட்டுப்பாட்டை மீண்டும் பாஜக கைப்பற்றியுள்ளது.

பல கவுன்சிலர்கள் பேரவைக்கும், மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் தில்லி மாநகராட்சியில் கவுன்சிலர்களின் பலம் 250-லிருந்து 238 ஆகக் குறைந்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் 104 ஆக இருந்த பாஜக கவுன்சிலர்களின் எண்ணிக்கை இப்போது 117 ஆக உள்ளது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்களின் எண்ணிக்கை 134 லிருந்து 113 ஆகக் குறைந்துள்ளது. காங்கிரஸ் எட்டு இடங்களுடன் உள்ளது.

வெற்றிக்குப் பிறகு, ராஜா இக்பால் சிங் மூத்த பாஜக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, தில்லியின் வளர்ச்சிக்கு பாரபட்சமின்றி செயல்படுவதாக உறுதியளித்தார்.

இதுபற்றி ராஜா இக்பால் கூறுகையில், “பிரதமர் நரேந்தி மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா மற்றும் பிற கட்சித் தலைவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். தில்லியின் வளர்ச்சிக்காக எந்த பாகுபாடும் இல்லாமல் முடிவுகள் எடுக்கப்படும்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.