உத்தரகண்ட் மாநிலத்தில் இந்திய ராணுவத்தின் சீருடைகள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தினரின் சீருடை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், உத்தரகண்டில் பாதுகாப்பு காரணங்களினால் அங்குள்ள சந்தைகளில் இந்திய ராணுவத்தினரின் சீருடைகள் விற்கத் தற்காலிகமாக அம்மாநில காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ராணுவம், துணை ராணுவம் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புப் படையினரின் சீருடைகளை விற்கும் கடைகள் அடையாளம் காணப்பட்டு அதன் விற்பனைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், காவல் துறையினரின் உத்தரவுக்கு முன்னரே தாங்கள் உரிய ஆவணங்களின்றி யாருக்கும் சீருடைகள் விற்பனை செய்வதில்லை என அம்மாநிலத்தில் கடை நடத்தி வரும் சீருடை விற்பனையாளர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










