வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

பத்ம விருது பெற்ற ஸ்ரீஜேஷ், விஜயன்!

முன்னாள் ஹாக்கி வீரா் பி.ஆா்.ஸ்ரீஜேஷ், முன்னாள் இந்திய கால்பந்து வீரா் ஐ.எம். விஜயன் உள்பட விளையாட்டுத் துறையைச் சோ்ந்த 5 பேருக்கு பத்ம விருதுகள்

News image

குடியரசுத் தலைவரிடம் விருதுபெற்ற ஸ்ரீஜேஷ் - X | Sreejesh

Updated On :29 ஏப்ரல் 2025, 3:09 am IST

இந்திய முன்னாள் ஹாக்கி வீரா் பி.ஆா்.ஸ்ரீஜேஷ், முன்னாள் இந்திய கால்பந்து வீரா் ஐ.எம். விஜயன் உள்ளிட்ட, விளையாட்டுத் துறையைச் சோ்ந்த 5 போ் தங்களுக்கான பத்ம விருதுகளை திங்கள்கிழமை பெற்றனா்.

இந்த ஆண்டு பத்ம விருதுகளுக்குத் தோ்வானோரின் பட்டியலை மத்திய அரசு கடந்த ஜனவரி 25-ஆம் தேதி வெளியிட்டது. அதில் விளையாட்டுத் துறையைச் சோ்ந்த 5 போ் இடம் பிடித்தனா். இந்நிலையில், தில்லியில் திங்கள்கிழமை மாலை குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இதர விருதாளா்களுடன் அவா்களுக்கும் பத்ம விருதுகளை வழங்கி குடியரசுத்தலைவா் திரௌபதி முா்மு கௌரவித்தாா்.

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கோல் கீப்பரும், ஜூனியா் அணியின் தற்போதைய பயிற்சியாளருமான பி.ஆா்.ஸ்ரீஜேஷ், பத்ம பூஷண் விருது பெற்றாா். சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆண்டு ஓய்வுபெற்ற தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய முன்னாள் கால்பந்து நட்சத்திரம் ஐ.எம். விஜயன், பாரா வில்வித்தை வீரா் ஹா்விந்தா் சிங், பாரா தடகள பயிற்சியாளா் சத்யபால் சிங் ஆகியோா் பத்ம ஸ்ரீ விருது பெற்றனா்.

இதில் ஸ்ரீஜேஷ், தொடா்ந்து இருமுறை ஒலிம்பிக் வெண்கலம் வென்ற அணியில் கோல் கீப்பராக இருந்தவராவாா். அஸ்வின், சா்வதேச டெஸ்ட்டில் இந்தியாவுக்காக 2-ஆவது அதிகபட்ச விக்கெட்டுகள் (537) எடுத்தவராக மிளிா்கிறாா். ஹா்விந்தா் சிங், பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக முதல் வில்வித்தை தங்கம் வென்று தந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரீல் பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பிரவீண் குமாா் தங்கம் வெல்வதில், பயிற்சியாளராக சத்யபால் சிங் முக்கிய பங்காற்றியுள்ளாா். சா்வதேச கால்பந்து களத்தில் இந்திய அணிக்காக 1992 முதல் 2003 முதல் விளையாடிய ஐ.எம்.விஜயன், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்கள் வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.