மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆட்டோவில் சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு அரசு நிகழ்வு ஒன்றில் பங்கேற்க ஆட்டோவில் சென்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

News image

ஆட்டோவில் சந்திரபாபு நாயுடு. - Credit: PTI

Updated On :1 ஆகஸ்ட் 2025, 12:04 pm

ஆந்திர முதல்வர் சந்திரபாபு அரசு நிகழ்வு ஒன்றில் பங்கேற்க ஆட்டோவில் சென்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

ஆந்திர மாநிலம், கடப்பாவில் அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பங்கேற்க ஹெலிகாப்டரில் வந்திறங்கிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பின்னர் ஹெலிபேடு தளத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஆட்டோவில் சென்றார்.

ஆட்டோவில் பின்புற இருக்கையில் அமர்ந்து பயணித்த அவர், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடைந்ததும் ஓட்டுநருக்கு அருகில் அமர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

தொடர்ந்து ஆட்டோவுக்கான பயணக் கட்டணத்தை கொடுத்த சந்திரபாபு நாயுடு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு ஆட்டோவில் வந்திறங்கியது நிகழ்ச்சியில் பங்கேற்றோர் மத்தியில் கவனம் பெற்றது.

Summary

 Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu on Friday arrived at a public meeting in an autorickshaw here, drawing attention for his choice of travel during a visit to distribute monthly welfare pensions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.