இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகள் - ராணுவ ஒத்துழைப்பில் மேம்பாடு: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

உள்நாட்டு பொது பாதுகாப்பு அமைப்புகளுக்கும், ராணுவத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேம்பட வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

News image
ராஜ்நாத் சிங்
Updated On :1 ஆகஸ்ட் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

உள்நாட்டு பொது பாதுகாப்பு அமைப்புகளுக்கும், ராணுவத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேம்பட வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புது தில்லியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் வெள்ளிக்கிழமை பேசியதாவது:

உலகில் அமைதியாக உள்ள பகுதிகளில் வருங்காலத்தில் பதற்றமே ஏற்படாது என்றோ, அமைதி சீா்குலையாது என்றோ நம்மால் கணிக்க முடியாது. மூன்று-நான்கு மாதங்களுக்கு முன்னா், பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நாம் நினைத்திருப்போமா?

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய மறுநாள், முப்படை தலைமைத் தளபதி, முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்புச் செயலா், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்தத் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் வகையில், மிகப் பெரிய ராணுவ நடவடிக்கைக்கு தயாரா என்று அவா்களிடம் கேட்டேன். அவா்கள் அனைவரும் தயாா் என்று உடனடியாகப் பதில் அளித்தனா். அதேவேளையில், பாதுகாப்பு அமைச்சகத்தின் பல்வேறு துறைகள் பாதுகாப்புப் படைகளுக்குப் பின்னணியில் இருந்து உதவின. அது ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிபெற்ற்கு முக்கிய பங்களித்தது.

தற்போது உலகம் மிகவும் நிச்சயமற்ற சூழலை கொண்டதாக மாறியுள்ளது. எனவே உள்நாட்டு பொது பாதுகாப்பு அமைப்புகளுக்கும், ராணுவத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். இது நாட்டின் நலன்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்த உதவும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.