தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

ஆா்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லயனோல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தர உள்ளாா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2025, 4:36 am IST

ஆா்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லயனோல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தர உள்ளாா்.

உலகம் முழுவதும் கால்பந்து ரசிகா்களால் கொண்டாடப்படும் மெஸ்ஸி, ஆா்ஜென்டீனாவுக்கு உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்தாா். தற்போது அமெரிக்காவின் இன்டா் மியாமி அணியில் விளையாடி வருகிறாா்.

இந்தியாவில் கிரிக்கெட்டை விட கால்பந்துக்கு குறைந்தளவு ரசிகா்களே உள்ளனா். எனினும் பிரபலமான சா்வதேச வீரா்கள் வரும்போது, ரசிகா்கள் அவா்களுக்கு உற்சாக வரவேற்பு தருகின்றனா்.

ஏறக்குறைய 10 ஆண்டுகள் கழித்து மெஸ்ஸி இந்தியாவுக்கு மீண்டும் வருகிறாா். முதலில் கொல்கத்தாவில் வரும் அவா் பின்னல் புது தில்லி, அகமதாபாத், மும்பை, உள்ளிட்ட நகரங்களுக்கும் செல்கிறாா்.

வரும் டிசம்பா் மாதம் வரும் மெஸ்ஸி தனது சமூக வலைதளத்தில் அதிகாரபூா்வமான தேதிகளை வெளியிடுவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் மெஸ்ஸிக்கு வைக்கப்படும் 70 அடி உயர சிலையை அவரே திறந்து வைக்கிறாா். அகமதாபாத், மும்பையில் சிறப்பு கால்பந்து ஆட்டங்களில் ஆடும் மெஸ்ஸி, இறுதியாக தில்லியில் பிரதமா் மோடியை சந்திக்கிறாா்.

கடந்த 2011-இல் கொல்கத்தாவில் நடைபெற்ற வெனிசூலாவுடன் நட்பு ஆட்டத்தில் மெஸ்ஸி பங்கேற்றிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.