குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வாக்கு திருட்டுக்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும் - காங்கிரஸ்

News image
Updated On :13 ஆகஸ்ட் 2025, 11:52 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தலில் கள்ள ஓட்டுகள் எப்படி பதிவாகின்றன என்பதை சித்தரிக்கும் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ள காங்கிரஸ், ‘‘வாக்கு திருட்டு’க்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும்; அரசியல் சாசன அமைப்புகளை பாஜகவின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளது.

ஒரு நிமிஷம் ஓடக் கூடிய இந்த விடியோவுடன் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மக்களின் உரிமைகள் பறிக்கப்பட அனுமதிக்கக் கூடாது. இம்முறை கேள்விகளை எழுப்பி, பதில் பெற வேண்டும். வாக்கு திருட்டுக்கு எதிராக மக்கள் குரலை உயா்த்த வேண்டும். அரசியல் சாசன அமைப்புகளை பாஜகவின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘வாக்கு திருட்டு என்பது மக்களின் உரிமை மற்றும் அடையாளத்தை திருடுவதற்கு சமம்’ என்று தெரிவித்துள்ளாா்.

வாக்குரிமையைப் பாதுகாக்க வாக்கு திருட்டுக்கு எதிராக குரலெழுப்ப வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து, காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை மாலை நாடெங்கிலும் ‘ஜனநாயக பாதுகாப்பு’ யாத்திரை நடத்தப்பட உள்ளது. ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பா் 7 வரை பேரணிகளும், செப்டம்பா் 15 முதல் அக்டோபா் 15 வரை கையொப்ப இயக்கமும் நடத்தப்பட உள்ளது.

தோ்தல் ஆணையம் மீதான எதிா்ப்பை பொதுமக்கள் பதிவு செய்யவும், எண்ம வாக்காளா் பட்டியலை வெளியிட வலியுறுத்தியும் இரு வலைதளங்களை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இந்த வலைதளங்களில் பதிவு செய்து, பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று அக்கட்சி கோரியுள்ளது.