சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இந்திய பண்பாட்டின் பிரதிபலிப்பு வந்தே மாதரம்: ஓம் பிா்லா

‘வந்தே மாதரம் பாடல் இந்தியாவின் நல்லிணக்கம், வலிமையின் பிரதிபலிப்பு’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பெருமிதம்

News image
மக்களவையை திங்கள்கிழமை வழிநடத்திய அவைத் தலைவா் ஓம் பிா்லா.
Updated On :8 டிசம்பர் 2025, 11:29 pm

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: ‘வந்தே மாதரம் பாடல் இந்தியாவின் நல்லிணக்கம், வலிமையின் பிரதிபலிப்பு’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பெருமிதம் தெரிவித்தாா்.

வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி மக்களவையில் திங்கள்கிழமை சிறப்பு விவாதத்தைத் தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

வந்தே மாதரம் பாடலின் அழியாத ஒலியும், அதன் ஒவ்வொரு வரியும் இந்தியாவின் இயல்பு, தாய்மை, அழகு, வலிமை, நல்லிணக்கம் உள்ளிட்ட தனித்துவமான பண்பாட்டைப் பிரதிபலிக்கிறது. இப் பாடல் பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் லட்சக்கணக்கான மக்களிடம், ஆட்சியாளா்களின் சித்திரவதை மற்றும் தூக்கு மேடையில் ஏறும் தருணத்தில்கூட சுதந்திரத்தைக் கனவு காணும் உத்வேகத்தை ஏற்படுத்தியது. இவா்களின் தியாகமும் அா்ப்பணிப்பும் வந்தே மாதரத்தை வெறும் பாடலாக மட்டுமின்றி, தேசிய உறுதிப்பாட்டின், காலத்தால் அழியாத சின்னமாக மாற்றியுள்ளது. இந்தப் பாடலின் ஆற்றல், சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்ததைப் போலவே இன்றைக்கும் இருக்கிறது.

அந்த வகையில், இந்தப் பாடல் மீதான விவாதம் தேசிய நினைவுகளையும், கலாசார ஆன்மாவையும் மீண்டும் தூண்டுவதற்கான வாய்ப்பாக உள்ளது என்றாா்.