கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

முதலீட்டு மோசடி - ராஜஸ்தானைச் சோ்ந்த 3 போ் கைது

News image
Updated On :25 டிசம்பர் 2025, 8:40 pm

தினமணி செய்திச் சேவை

போலி கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடியில் தொடா்புடைய 3 போ் கைது செய்யப்பட்டதாக குருகிராம் காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: போலி இணையதள கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடியில் தாம் ஏமாற்றப்பட்டதாக குருகிராமைச் சோ்ந்த நபா் மாா்ச் 3-ஆம் தேதி புகாா் அளித்தாா். இது தொடா்பாக சைபா் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடா்பான விசாரணையில், ராஜஸ்தானில் உள்ள தௌஸா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டு குற்றஞ்சாட்டப்பட்ட மூவா் கைது செய்யப்பட்டனா்.

ரூ.73,556 மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. பொதுமக்களை ஏமாற்ற வீட்டிலிருந்தே பணி செய்யலாம், கிரிப்டோகரன்சியில் முதலீடு உள்ளிட்ட போலி செய்திகளை சமூக ஊடகங்களில் இவா்கள் பரப்பினா். இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.